Tuesday, September 19, 2023

பிணத்தை எரித்து வெளிச்சம்-தொகுப்பும்-மொழிபெயர்ப்பும்-இந்திரன்-சோலைமாயவன்

மீள்பதிவு
~~~~~~£
நேற்று காதலர் தினத்திற்கு கிடைத்த பரிசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்பாதவன் சார் முகநூல் எழுதிய

"இளவரசனுக்கு ஓடும் ரயில்
சங்கருக்கு அரிவாள் வெட்டு
இன்னொருத்தன் எப்படி செத்தான்  ஜெயில்ல சொகமா இருக்குறவனுக்கு தான் தெரியும்
#காதலர் தினம் வாழ்க 
இந்தக் கவிதையோடு நேற்றைய நாள்  தொடங்கியது
 பிரியா அவர்கள் எழுதிய காலந்தி நாவலை வாசித்து முடித்தேன் 

எந்த விதமான கொண்டாட்டமான மனநிலை இல்லாமல் மனச்சோர்வுடன்  நாள் நகர்ந்தது

காலை பதினோரு மணிக்கு என் துணைவியார் போனில் அழைத்தார் இன்று நம்முடைய சிறப்பு தினம் எனக்கு எந்த பரிசும் இல்லையா என்றார்கள்

    வழக்கம் போல வருசம் வருசம் நான் தானே வாங்கி கொடுப்பேன் இந்த முறை நீ பரிசு கொடு என்றேன் அப்பொழுது சிறந்த பரிசாக நானே கிடைத்தப்பிறகு வேறென்ன வேண்டும் என்றாள்
  ஒருஅரை மணி நேரம் சிரித்துக் கொண்டேன்
சரி உங்களுக்கு என்ன தான் வேண்டும் என்றாள்
 காதலர் தினத்திற்காக கிடைத்த பரிசு

 இந்திரன் சார்  தொகுத்த 
பிணத்தை எரித்தே வெளிச்சம் என்ற இலக்கிய நூல்
புதிய வடிவத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீட்டு இருக்கிறது

குஜராத்தி-மராத்தி-தமிழ் மூன்று மொழிகளிலும் தலித் இலக்கிய அடையாளத்தின் படைப்புகள் இந்திரன் சார்  தொகுத்து இருக்கிறார்
 நான் தமிழ்ப்பகுதி மட்டுமே என் வாசிக்க முடிந்தது அது உங்கள் பார்வைக்காக

மொழியோ பழசு
கதையோ நைந்துவிட்டது
வெளிச்சக்கிரணம் மிகவும் மெலிது
எல்லாம் மங்கி தெரியும் இக்கணம்
சலனமற்று நாற்புறமும் அமைந்துவிட்டன
இன்று
பிணத்தை எரித்து வெளிச்சம்
                      -பாதல் சர்க்கார்

உங்களது கருப்புத் தோலை
உடலை மூடும் ஒரு அங்கியைப் போல்
அணியாதீர்கள்
அதனை போர்கொடியைப் போல்
உயர்த்திப் பிடியுங்கள்
             -லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்
ஆப்பிரிக்கா்களின் கருப்பு இலக்கியம் பற்றி ழான் பால்சார்த்தார் குறிப்பிடுகிறார் "இது இனவெறியை எதிர்க்கும் இனவெறி இதைபோன்று தான் தலித் இலக்கியம் சாதிஅடையாம் குறித்து பேசுகிறது என்று சொன்னால் அதன் இறுதி நோக்கம் சாதிமுறையை முழுமையாக ஒழிப்பது தான் சாதி ஒழிப்பதற்காக சாதி அடையாளம் தேவைப்படுகிறது

பல்வேறு வரலாற்று சான்றுடன் இந்த நூலுக்கான முன்னுரையை எழுதி இருக்கிறார் இந்திரன்
அவர்களின் இந்த முன்னுரையில் கடைசியில் நான் யார் என்ற கேள்வியொடு முன் வைத்து முடிக்கிறார் 

             ~அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தலித் என்ற  பதப் பிரயோகத்துடன் கூடிய அடையாளம் கொண்ட இலக்கிய முயற்சிகள் தமிழில் பெருகின

                ~ஈழத்தில் எழுத்தாளர் டானியல் தமிழகத்தில் பூமணி எழுதிய பிறகு நாவல்
1982ல் வெளிவந்த  இந்திரனின் அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தலித்துக்கள் போன்றே கருப்பர் இன விடுதலைக்கு  எப்படிஎழுதினார்கள் என்பது எடுத்துரைத்தது
தமிழிலக்கியத்தில் தலித் அடையாளங்களை அவருடைய படைப்புகளை கவிதைகளை இங்கே தொகுத்திருக்கிறார்

மாடு குளிப்பாட்டலாம் 
துணி அலசலாம்
சூத்தும் கழுவலாம்

நாங்கள் மட்டும்தான்
தண்ணி மொள்ளக்கூடாது

ரவிக்குமார் எழுதிய அது தவிர என தலைப்பிட்டஒரு கவிதையின் கடைசி வரி
இச்சமூகம் எவ்வளவு பெரிய துரோக்கத்தை இழைத்துஇருக்கிறார். விலங்குகளை கேவலமாக பார்க்கும் பார்வை என்னவென்று சொல்வது

பள்ளிக்கூடத்தில் பிணம் என்ற தலைப்பில் இந்திரனின் ஒரு கவிதை 

அறுத்துப் பார்க்கையில் 
எல்லா சாதியின்
மலக் குடலுக்கும் ஒரே நாற்றம்

எல்லார் உடம்பிலும் ஓடும் ரத்தம் கிகப்பு தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இக்கவிதை உன் உடலுக்குள்ளும் ஒரு அவமானமாக ஒரு மலக்குடல் வைத்திருக்கிறாயே நீ எப்படி இந்த உலகத்தில் என்னைவிட உயர்ந்தவன் என்று கேட்கிறாய் என்ற கேள்வி ஒரு புதிய கோணத்தை புதிய வெளிச்சத்தை புதிய பார்வையை இங்கே தந்திருக்கிறது

          ~ஒடுக்கப்பட்டவர்கள் எந்த பொது இடத்திலும் ஒரு தேனீர் கடை ஒரு மளிகைக் கடையும் வைத்திருக்கக்கூடாது அப்படி வைக்கின்ற போது அது ஒரு ஆதிக்க சாதிக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது அந்தக்கடையை அகற்றுவதில் எற்பட்ட பிரச்சனை அது  சேரி குடிசைகளையும்எரிக்கத் தொடங்குகிறது என்ற கருத்தை முன்வைத்து நீறுபூத்த என்ற சிறுகதையை எழுதி உள்ளார் காவலுர் ஜெகநாதன்

           ~அந்த சிறுகதையில்  "அடக்கத் துடிக்கும் சாதிவெறியர்களுக்கும் அடங்க மறுக்கும் உழைக்கும் கரங்களுக்கும் இடையே துவந்த யுத்தம்
 செல்லையர் கடை  எரிகிறது

பல நிமிடங்கள் பதட்டத்தில் கழிய…..

 ஊரின் வடபுறம் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின்  கிராமத்தை தீ தின்றது.

              ~எத்தனை முறை ஒலி நாடாவில் கேட்ட 
பாடல் தான்  வரி வடிவமாக இப்போதுதான் வாசிக்கிறேன்
 இந்த கவிதையை இன்குலாப் எழுதிய மனுஷங்கடா என்ற கவிதையை ஒவ்வொரு எழுத்துக்களுக்குள் ஒவ்வொரு வலி வலி

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே -ஒங்க
 சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெ ஊத்துதே
எதை எதையோ சலுகஐயின்னுஅறிவிக்கிறாங்க நாங்க 
எரியும்போது எவன் மசுரைப் புடுங்க போனீங்க

இக்கவிதையின் வரிகள் இன்றும் நம்  இன்றுகண்முன்னே இருக்கிறது அந்த காட்சிகள் மாற்றம் இல்லாமல் இருக்கிறன்றன
 கவிஞன் காலத்தின் கண்ணாடி 
இன்குலாப் அவர்கள்  காலத்தின் கண்ணாடி

           ~ராக்கமா பேத்தி என்ற தலைப்பில் டாக்டர் ராஜ்கௌதமன் ஒரு சிறுகதையை இதில்  இடம்பெற்று உள்ளது முழுக்க முழுக்க கிராமத்தில் இருக்கும் பாட்டிகள்(ஆயாக்கள்) ஏற்படும் துயரம் நிறைந்த வாழ்வும்
அந்த பாட்டிகள் ஆண்டைகளிடம் பட்ட அவமானத்தையும் துயரத்தையும் நம் கண்முன்னே நிற்கிறது

            ~தலித் கலை இலக்கியங்கள் என்ற தலைப்பில் டாக்டர் கே ஏ குணசேகரன் அவர்களுடைய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது
சங்கஇலக்கியம் தொடங்கி நாட்டுப்புற கலைகள்வழி தலித்கலைகள் தனித்த அடையாளங்கள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளதையும் ஒவ்வொரு கலைவடிவத்தில் நாம் எதிர்ப்புக் குரலை எவ்வாறு உள்ளே கொண்டு வருவது  என்பதையும் இந்த கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்

    ~குறவன் குறத்தி ஆட்டம் என்ற வடிவில்வருகின்ற ஒரு பாடல் இன்றைய காலத்திற்கு மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது

அட எத்தனையோ புத்திகள
எடுத்துரைச்சுச்  சொன்னாலும்
நெத்தம் போய் குடிக்கிறியே
நீயும் ஒரு ஆம்பளையா -அட
ஒன்னோட என்னடா பேச்சு - சும்மா
ஒதுங்கிப் போடா.  சீச்சி

         ~ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக எதிர்க்குரல் எழுப்புவதாக தலித் படைப்புகள் விளங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஒரு படைப்பின் நோக்கத்தையும்
 டாக்டர் கே ஏ குணசேகரன் முன்வைக்கிறார்

      கே டானியல் எழுதிய கானல் என்ற சிறுகதையும் இதில் இடம்பெற்றுள்ளது

தேவாலயத்தில் பாவமன்னிப்பு கொடுக்கும் குருவானவர் இளையவனிடம் ஒவ்வொரு கேள்வி கேட்கிறார் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில் சொல்கிறான் கடைசியாக
படகினி என்ற வார்த்தையை அவன் உச்சரிக்கிறார் அதன்பிறகு குருவானவர்
 இயேசு நாதர்முன்பு மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்கிறார்
 படகினி என்றால் வயிற்றில் நெருப்பு
பசிஎன்னும்  நெருப்பு இருக்கின்றபோது கடவுளும் தொழுகையும் ஒருவனுக்கு தேவையில்லை என்று கதை  முடிகிறது

     ~~சுகிர்தராணி அவர்களின் வீடு திரும்புதல் என்ற கவிதை

சிதையில் எரியும் பிணத்தின் விரைப்பென
எல்லோரும் கைதட்டுகிறார்கள்
மேடையை விட்டு
நாமிருவம் கீழிறங்குகிறோம்
வரிசை தப்பி  மக்கள் கலைகிறார்கள்
நீ ஊருக்குள் போகிறாய்
நான் சேரிக்குச் செல்கிறேன்

   வலி நிறைந்த சொற்களாக கவிதை
அந்தசொற்கள்  சமூகத்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது என்னதான் இருந்தாலும் நீ ஊர் நான் சேரி தானே  என்பதை சமூகத்தின் அவலத்தை சுட்டிக்காட்டுகிறார்

            ~ஆடுகளம் தலைப்பில் என் டி ராஜ்குமார் 
 எங்களுக்கு சொல்லித்தர
அடவும் தகுதியும் இல்லாத  துரோணா 
மீன்முள் வாளெடுத்து
 ஆமைத்தோடு கேடயம் செய்து
 செறுத்தடிக்கும்
 ஆயுதம் பிடிக்க தெரியாதவன் நீ

காலங்காலமாய் எல்லா கலைகளும் முன்னோடியாக இருந்தவன் ஆதிக்குடிகள் மக்கள் அவர்களுக்கு தான் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி சொல்லியே அவர்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு வைத்தார்கள் ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற சொல்லவருகிறார் கவிஞர் என் டி ராஜ்குமார்

         ~பெயர் என்ற தலைப்பில்அன்பாதவனின்
கடவுளின் குழந்தைகள்
செல்லமாய் வருடிக்கொடுத்தனர் சிலர்.
ஆலயங்களுக்குள் நுழைய மறுக்கப்பட்ட எனக்கு உதவாதஆண்டவனின் பெயர் எதற்கு 

என்ற இந்தக் கேள்வியை முன்வைத்து என் பலம் மொழி உழைப்பு துணையாக இயற்கை  என் பெயரை மலைமுகடுகளில் எதிரொலிக்க எதிரொலிக்க கூறுவேன் என்று அந்த கவிதையை முடிக்கிறார்

அயோத்திதாசர் வாழும் பவுத்தம் என்ற தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய கட்டுரை ஒன்று நீண்ட அளவிலான ஒரு ஆய்வுக் கட்டுரையாக உள்ளது

கடைசியாக பெண்ணும் தலித்தும் என்ற தலைப்பிலான இந்திரன் எழுதிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது
தாழ்த்தப்பட்ட ஆண்கள் அனுபவிக்கும் கொடுமையை விட பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மிக மிக அதிகம்
சாதி மாதம் அரசு குடும்பம் பொருளாதாரம் சட்டம் ஆகிய அனைத்து அதிகார மையங்களும் இவருக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக அணி திரண்டது உள்ளனஇதனால் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் ஒவ்வொரு தலித்துகளின் சிந்தனையிலும் என்றைக்கும் ஆறாத காயத்தை ஏற்படுத்தி உள்ளன
              ஒரு ஆயுதமாக இந்தத் தொகுப்பைத் தொகுத்து இருக்கும் இந்திரன் சாருக்கு அன்பும் நன்றி…..
      -சோலைமாயவன்

1 comment: