நான்கு சுவருக்குள் நிகழ்ந்தெனினும் பல கோடி துகளாக சிதறிக்கிடக்கின்றேன் சிறு சிறு ஊசிகளைக் கொண்டு உடைபடாத என்னை தேடுகிறது -சோலைமாயவன்
நீருக்குள் உறைந்துகிடக்கும் மனம் மீனாக துள்ளுகிறது காலம் காலமாக சபிக்கப்பட்ட அத்தவளைகள் தவத்திலும் நெளிகின்றன சிறியதும் பெரியதுமான கற்களை நிரப்பிய பின் வெளியேறவே இல்லை வற்றிய கிணற்றின் பழங்கதைகள்... - சோலைமாயவன்