மாயா-49
கோடைகாலத்தின் ஊற்றெடுக்கும் வெயில்நீரை
நிலமெங்கும் பாயுமர பாலைவனத்தின்
மணல்துகள் குகையினுள் என் உயிரே -நீ
மீளவழிற்று சிறைப்பட்டுக்கிறாய்
என்
றெக்கைகள் உதிரும் வரை
பறவையாய் மணல்காட்டில்
சுற்றி திரிந்தேன்-உன்னை
மீட்டெடுக்க
என் செந்நிற அலகுகளால்
வலிமையான மணல்பாறையை
கொத்தி கொத்தி-என்
குருதியால் மீட்டுவிடமால்
மயக்கமுற்று ஒலமிடுகிறேன்
பூமிக்குள் புதைக்கப்பட்ட
சிறுவிதையென
மணற்குன்றுக்குள் முழ்கிக்கிடக்கிறாய்
நான் புயற்காற்றாய்
பிறப்பெடுத்து
மணலைதூசியென பறக்க விட
கோட்டையாய் என் முன்னே நிற்கிறது
அடைமழையென
விடாமல் பொழிகிறேன்
கரையும் மணல் ராஜ்ஜியம்
இன்னொரு மணலை
உன் மீது நிரப்பி விடுகிறது
திட்டுதிட்டாய்
குவிந்து கிடக்கும் மணல்தீவுக்குள்
நீர் நிரம்பிய குளமென
நிற்கிறேன்
என் நீரின் கைகளால் உன் வேரினை தொடுவேன்
என்
தண்ணீரின் வாசத்தால்
உன் இலைகள் முளைக்கும்
என் குளம்
கொஞ்சம் கொஞ்சமாக
உருமாற்றம் அடைகிறது
கடலாக
கோடைகாலத்தின் ஊற்றெடுக்கும் வெயில்நீரை
நிலமெங்கும் பாயுமர பாலைவனத்தின்
மணல்துகள் குகையினுள் என் உயிரே -நீ
மீளவழிற்று சிறைப்பட்டுக்கிறாய்
என்
றெக்கைகள் உதிரும் வரை
பறவையாய் மணல்காட்டில்
சுற்றி திரிந்தேன்-உன்னை
மீட்டெடுக்க
என் செந்நிற அலகுகளால்
வலிமையான மணல்பாறையை
கொத்தி கொத்தி-என்
குருதியால் மீட்டுவிடமால்
மயக்கமுற்று ஒலமிடுகிறேன்
பூமிக்குள் புதைக்கப்பட்ட
சிறுவிதையென
மணற்குன்றுக்குள் முழ்கிக்கிடக்கிறாய்
நான் புயற்காற்றாய்
பிறப்பெடுத்து
மணலைதூசியென பறக்க விட
கோட்டையாய் என் முன்னே நிற்கிறது
அடைமழையென
விடாமல் பொழிகிறேன்
கரையும் மணல் ராஜ்ஜியம்
இன்னொரு மணலை
உன் மீது நிரப்பி விடுகிறது
திட்டுதிட்டாய்
குவிந்து கிடக்கும் மணல்தீவுக்குள்
நீர் நிரம்பிய குளமென
நிற்கிறேன்
என் நீரின் கைகளால் உன் வேரினை தொடுவேன்
என்
தண்ணீரின் வாசத்தால்
உன் இலைகள் முளைக்கும்
என் குளம்
கொஞ்சம் கொஞ்சமாக
உருமாற்றம் அடைகிறது
கடலாக