Sunday, February 26, 2023

சோலைமாயவன் கவிதை

மாயா-63
ஆற்றின் நடுவில் மிதந்துசெல்லும் விரிக்காத தாமரை மொட்டென காத்திருக்கிறேன்

என் கார்காலம் பொழுதில்
விதைகளை பயிரிட
நிலமெங்கும் உழது உலர்த்தி வைத்திருக்கிறேன்

உள்ளங்கையில் சூரியனின்ஒளி படும்படி
விரல்களை விரித்து
துளி மழைக்கும் ஏங்கும்
உழவனின் நம்பிக்கையின் பேரொளியை நான்
பிடித்திருக்கிறேன்

உன் வாசம் தீண்டலில்லாமல்
வாடிக்கிடக்கும் தொட்டாசிணுங்கியின்
இலைகளுக்குள் என் கனவுகளை ஒளித்து வைத்திருக்கிறேன்

பெரும்பிரளயத்தின் கண்ணாடியில்
முதல்  செடியாய் பெருமகிழ் பூத்திட என் மகரந்தங்களை உனக்குள்
காற்றென நிரப்பிவிடுகிறேன்

No comments:

Post a Comment