Sunday, February 26, 2023

சோலைமாயவன் கவிதை

காதல் தளும்பிய நிரலைகளில் மௌனத்திருக்கும் மொட்டுகள் இமை திறக்காமல் தியானத்தில் நிற்கும் சூரியனின் ஒளிப்பறவைகள் சிறகு விரிக்காத குளிர்காலப் பொழுதொன்றின் அதிகாலையில் ஜஸ் உறைந்திருக்கும் அகன்ற குளத்தில் நீராட இறங்குகிறாய் பூ இதழ் மேனியெங்கும் போர்த்திய மெல்லிய ஆடையை இறுக அணிந்திருக்கிறாய் வளர்ந்த மரத்தின் கிளை உச்சியில் ஒரு பறவையின் அலகு போன்று கண்களால் விழித்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் முழ்கி முழ்கி எழும் போது விலகாத ஆடையாய் என் பார்வையை நிறுத்தி வைத்திருக்கிறேன்

No comments:

Post a Comment