மாயா
என் வழிநெடுகிலும்
பின் தொடருகிறது-அப்
பாடலின் முதல் சொல்
அப்பாடலின் முதற்சொல்லுக்கும் அடுத்த
சொல்லுக்கும் பெரிய பாலமொன்று இடிந்துகிடந்தது
முதற்சொல்லின் வழியாக
அப்பாடலுக்குள் நுள்உழைய முற்படுகையில் என் பின்னங்காலில் இறுகும் சங்கிலின் வலிமை மெல்ல உணர்கிறேன்
நிலம் இழந்தவனைப் போல
வனம் இழந்தவனைப்போல
அச்சொல்லை பாடலென்று
திரும்ப திரும்ப
பாடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு சொல்
ஒரு பாடல்
இந்த ஜென்மத்தின் குரலாக ஒலிக்கட்டும்
No comments:
Post a Comment