கடவுள் மாதிரி
ஒரு பூ
பூவுக்குள் மலர்ந்த
கடவுள்
பூ வேண்டுமா
கடவுள் வேண்டுமா
கேட்டேன்
அன்பு மகளிடம்..
பூவை அள்ளி
சூடிக்
கடவுளாகிறாள்
அறையெங்கும்
உதிர்ந்து கிடந்தன
பூக்கள்
மகளின் பாதச்சுவட்டில்
உயிர்த்து எழுகிறார்கள்
கடவுள்கள்
பூப் பூவாய்....
ஒரு பூ
பூவுக்குள் மலர்ந்த
கடவுள்
பூ வேண்டுமா
கடவுள் வேண்டுமா
கேட்டேன்
அன்பு மகளிடம்..
பூவை அள்ளி
சூடிக்
கடவுளாகிறாள்
அறையெங்கும்
உதிர்ந்து கிடந்தன
பூக்கள்
மகளின் பாதச்சுவட்டில்
உயிர்த்து எழுகிறார்கள்
கடவுள்கள்
பூப் பூவாய்....
No comments:
Post a Comment