Sunday, December 20, 2015

பூ

கடவுள் மாதிரி
ஒரு பூ

பூவுக்குள்  மலர்ந்த
கடவுள்
பூ வேண்டுமா
கடவுள் வேண்டுமா
கேட்டேன்
அன்பு மகளிடம்..

பூவை அள்ளி
சூடிக்
கடவுளாகிறாள்

அறையெங்கும்
உதிர்ந்து கிடந்தன
பூக்கள்
மகளின் பாதச்சுவட்டில்
உயிர்த்து எழுகிறார்கள்
கடவுள்கள்
பூப் பூவாய்....

No comments:

Post a Comment