அகத்தில் ஊறும்
பாம்புகளைத் திரட்டி
காடென மிளிரும்
பாதாளத்தில் விரட்டுக்கின்றேன்
பழகப்பட்ட என் உடல் மீது
மோகத்தில் நெளிகின்றன
புதர்கள் நீக்கப்பட்ட வாசலில்..
என்
மகுடியின்
அத்தனைப்பிராயத்தனங்களும்
உதிர்ந்த இலைகளென
கிடக்கின்றன
அச்சங்களில் முழ்கிய
என்னை
மீட்பதறிய யோசனையில்
பைத்தியமென
உலாவுகிறேன்
விஷமேறியப் பாம்புகளுடன்
மனிதர்கள்
வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்
பாம்புகளைத் திரட்டி
காடென மிளிரும்
பாதாளத்தில் விரட்டுக்கின்றேன்
பழகப்பட்ட என் உடல் மீது
மோகத்தில் நெளிகின்றன
புதர்கள் நீக்கப்பட்ட வாசலில்..
என்
மகுடியின்
அத்தனைப்பிராயத்தனங்களும்
உதிர்ந்த இலைகளென
கிடக்கின்றன
அச்சங்களில் முழ்கிய
என்னை
மீட்பதறிய யோசனையில்
பைத்தியமென
உலாவுகிறேன்
விஷமேறியப் பாம்புகளுடன்
மனிதர்கள்
வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்
No comments:
Post a Comment