Sunday, December 20, 2015

கதவு

சற்று முன்
தான்
அந்தக் கடிதம்
திணிக்கப்பட்டது

முகவரியில் என்
பெயர் குறிப்பிடப்படவில்லை

நான்
மறுத்தப்பின்னும்
சட்டப்பையில் சொருகிச்செல்கிறார்

ஒட்டியப்பகுதியை
மனசாட்சி இல்லா
இரவு காலத்தினல்
தனிமையில் சன்னமாகப்
பிரித்துப்பார்க்கிறேன்

முதல்வரியில்
அன்புடன் எனத்தொடங்கியது
கடிதம்

மேலே வாசிக்க  வாசிக்க
நெருப்பில் காய்ச்சிய
மெழுகுவென
உருகியஎன் இதயத்தோடு
 ஒட்டிக்கொண்டது
தனித்துக்கிடந்த மனசாட்சி

கழுத்தில்சூட்டிய மாலையென
வார்த்தைகளை
எனக்கானதாக  அணிகின்றேன்

வெளியே
சூரியன் தலை நீட்ட
எனது அலமாரியில்
பத்திரப்படுத்துக்கிறேன்
முகவரியை மறைத்து....

No comments:

Post a Comment