நீருக்குள் உறைந்துகிடக்கும்
மனம்
மீனாக துள்ளுகிறது
காலம் காலமாக சபிக்கப்பட்ட
அத்தவளைகள்
தவத்திலும் நெளிகின்றன
சிறியதும் பெரியதுமான கற்களை
நிரப்பிய பின்
வெளியேறவே இல்லை
வற்றிய கிணற்றின் பழங்கதைகள்...
- சோலைமாயவன்
No comments:
Post a Comment