Tuesday, May 21, 2019

காலம்

நீருக்குள் உறைந்துகிடக்கும்
மனம்
மீனாக  துள்ளுகிறது
காலம் காலமாக சபிக்கப்பட்ட
அத்தவளைகள் 
தவத்திலும் நெளிகின்றன
சிறியதும் பெரியதுமான கற்களை
நிரப்பிய  பின்
வெளியேறவே இல்லை
வற்றிய கிணற்றின் பழங்கதைகள்...
                                 - சோலைமாயவன்

No comments:

Post a Comment