Saturday, December 2, 2017

மாயா-85
மூன்றாவதுபிளவாக
வெடிக்கத் தொடங்கியது
பாறையொன்று

முதல் பிளவிலிருந்து
வெணமை நிறம் பொருந்திய வாத்து
மேலே வந்த்து
உன்
றெக்கையிலிருந்து இறகொன்றைஎடுத்து
அதன் உடல் முழுக்க
ஒளிர்கதிர்களை பொருத்தி சூரியனாக வானத்தில் பறக்கவிட்டாய்

இரண்டாவாது பிளவிலிருந்து கருநிறபந்தொன்று  கைகளில் தவழ்ந்து உன்
கண்களில் இருந்து சிறுதுளி ஒளியை அதனுள் பாய்ச்சிகிறாய் நிலவென ஆகாயத்தின் உச்சியில் ஒளிர்ந்து

மூன்றாவது பிளவிருந்து வரிசை படையெடுத்த
ஒவ்வொன்றையும்
மழையென
நட்சத்திரங்களென
மேகமென
இரவென
பகலென
அனைத்திற்கும் உன் சிறகுகளிலிருந்து உயிர்பித்தாய்
நீ றெக்கையற்ற பறவையென பூமியாய்
பறந்திருக்கிறாய்

நீ
படைத்தவைகள்
பருவங்கள் தோறும்
உன்னிடம் சரண் அடைகின்றன மாயா

No comments:

Post a Comment